தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

தமிழா!தமிழா!ஒன்றுபடு தாயகவிடுதலையை வென்றுவிடு

Saturday 27 March 2010

யாழ் பல்கலைக்கழகத்தின் 25 வது பட்டமளிப்பு விழா


யாழ் பல்கலைக்கழகத்தின் 25 வது பட்டமளிப்பு விழா கைலாசபதி கலையரங்கில் இன்று முதல் மூன்று நாட்களுக்குக் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இப்பட்டமளிப்பு விழாவில் 2005,2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்த 3 ஆயிரத்து 972 பேர் பட்டம் பெறவுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ம.சிவசூரியா தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பில் ஒவ்வொரு நாளும் 15 அமர்வுகள் நடைபெறும். இப் பட்டமளிப்பு விழாவில் கலாநிதி, முதுகலைமாணி, இளமாணி, பட்டப்பின் டிப்ளோமா ஆகிய பட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

சுமார் ஐந்து வருட கால இடைவெளியின் பின் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.