தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

தமிழா!தமிழா!ஒன்றுபடு தாயகவிடுதலையை வென்றுவிடு

Saturday, 27 March 2010

கிளிநொச்சி சிறைச்சாலை 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளது


கிளிநொச்சி சிறைச்சாலை 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ள நீதி மற்றும் நீதிமறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் அமைந்திருந்த சிறைச்சாலை கட்டிடம் விடுதலைப்புலிகளின் முகாமாக இயங்கிவந்தது. சேதமடைந்த நிலையில் காணப்படும் கிளிநொச்சி சிறைச்சாலை கட்டிடத்தை சீரமைத்த பின்னர் அடுத்த சில மாதங்களில் அது திறக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தை இயங்க வைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் சிறைச்சாலையை ஏற்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைத்திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர்கள் தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளர்.